Wednesday 23 March 2016

கிருஷ்ண காயத்திரி மந்திரம்:–
ஓம் தாமோதராய வித்மஹே
ருக்மணீ வல்லபாய தீமஹி
தந்நோ க்ருஷ்ணஹ் ப்ரசோதயாத்’

பாவம் போக்கும் விஷ்ணு காயத்திரி மந்திரம்

ஓம் நாராயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்’

கேட்ட வரம் தரும் காளிகா தேவி ஸ்லோகம்

ஓம் காளிகாயை ச வித்மஹே
ஸ்மசான வாசின்யை தீமஹி
தன்னோ கோரா ப்ரசோதயாத்

சுதர்சனர் தியான ஸ்லோகம்

சுதர்சனர் காயத்திரி
சக்ர ராஜாய வித்மஹே
ஜ்வாலா சக்ராய தீமஹி
தந்ந: சக்ர: ப்ரசோதயாத்
ஓம் ஸஹஸ்ரார ஹீம்பட்
ஓம் நமோ பகவதே மஹா
ஸீதர்சனாய மஹாசக்ராய
மஹா ஜ்வாலாய தீப்தி
ரூபாய ஸர்வதோ ரக்ஷ
ரக்ஷ மாம் மஹாபலாய ஸ்வாஹா
ஓம் ஸஹஸ்ரார ஹூம்பட்


மகாலட்சுமி தமிழ் ஸ்துதி


மகாலட்சுமி தமிழ் ஸ்துதி

லக்ஷ்மியே எங்கள் இஷ்டலக்ஷ்மியே
அஷ்டலக்ஷ்மியே மகா விஷ்ணு லக்ஷ்மியே

சகல சக்தியும் தந்திடுவாள் வீரலக்ஷ்மியே
சர்வ துக்கம் தீர்த்திடுவாள் சுபலக்ஷ்மியே

வீரமான வெற்றி தரும் விஜயலக்ஷ்மியே
தானியங்கள் விருத்தி செய்யும் தான்யலக்ஷ்மியே

விஷ்ணு மார்பில் அமர்ந்திருக்கும் மகாலக்ஷ்மியே
கேட்கும் வரங்கள் தந்திடுவாள் வரலக்ஷ்மியே

செல்வம் பல தந்திடுவாள் சொர்ண லக்ஷ்மியே
சித்தி புத்தி தந்திடுவாள் சீதாலக்ஷ்மியே

பிள்ளைப் பேறைக் கொடுத்திடுவாள் சந்தானலக்ஷ்மியே
சர்வலோகம் காத்திடுவாள் ஜோதிலக்ஷ்மியே

இதயத்தில் குடியிருப்பாள் இராஜலக்ஷ்மியே
இருளை நீக்கி அருளைப் பொழியும் தீபலக்ஷ்மியே

விநாயகரைத் துதிக்க ஒரு மந்திரம்

ஓம் சுமுகாய நம ஓம் ஏகதந்தாய நம
ஓம் கபிலாய நம ஓம் கஜகர்ணாய நம
ஓம் லம்போதராய நம ஓம் நாயகாய நம
ஓம் விக்னராஜாய நம ஓம் கணாத்பதியே நம
ஓம் தூமகேதுவே நம ஓம் கணாத்ய க்ஷசாய நம
ஓம் பாலசந்த்ராய நம ஓம் கஜானனாய நம
ஓம் வக்ரதுண்டாய நம ஓம் சூர்ப்ப கர்ணாய நம
ஓம் ஹேரம்பாய நம ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம

இந்த மந்திரத்தை தினந்தோறும் மனம் உருகச் சொல்லி விநாயகரை வழிபட்டு வந்தால் சகல சவுபாக்கியங்களோடு, சந்தோஷமான வாழ்வைப் பெறலாம்


சரஸ்வதி தேவி காயத்திரி மந்திரம்

ஓம் பிரம்ம சக்தியை வித்மஹே
பீதவர்ணாயை தீமஹி தன்னோ
பிராம்ஹீ ப்ரசோதயாத்’

பணப்பிரச்சனைகளை தீர்க்கும் அனுமன் மந்திரம்

ஆற்றலால் தமது இயல்பு பூரணமடைந்திருந்தாலும் எவ்வித வெளித்தோற்ற சஞ்சலங்களாலும் பாதிப்படையாமலும், அன்னை சீதா மகாலட்சுமியின் திவ்யமான அருள்பிரவாகத்தில் திளைத்து, ராமனின் உள்ளம் கவர்ந்த சுந்தரனாகவும் இருக்கும் அனுமனின் மீதமைந்த இந்த மந்திரம் உச்சரிப்பவரின் உள்ளம் உள்ளூர விரும்பும் நல்ல விளைவுகளை தந்தருளும் என்பது நிச்சயமாகும்.
இதை ஒரு வளர்பிறை ஞாயிற்றுக்கிழமையோ, அல்லது வளர்பிறை வியாழக்கிழமையோ ஆரம்பித்துச் செய்யவேண்டும். அனுமனின் சன்னிதியிலோ அல்லது ஒரு அரச மரத்தடியிலோ அமர்ந்து சொல்வது மிக நல்ல பலன்களைத் தரும். 48 முறைகளோ, 108 முறைகளோ உள்ளார்ந்த பக்தியுடன் ஜபித்து வருவதும், அசைவம் தவிர்ப்பதுமே மிக முக்கியமான விதியாகும். வேறு நியதிகள் பெரியதாக இம்முறைக்கு இல்லை.
மந்திரம் கீழ்வருமாறு:
'
ஓம் ஹ்ரீம் உத்தரமுஹே
ஆதி வராஹாய பஞ்ச
முஹி ஹநுமதே லம்லம்
லம்லம் ஸகல
ஸம்பத்கராய ஸ்வாஹா'. 

தினமும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

ஓம் விஷ்ணு தேவாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தன்னோ விஷ்ணு ப்ரஜோதயாத்’
இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்து, தூய ஆடைகளை அணிந்து, தூய ஜலத்தால், சாளக்ராமத்தை ஒரு சிறு செம்புத் தட்டில் வைத்து நீராட்டி, மென்மையான பட்டுத்துணியால் ஒற்றியெடுக்க வேண்டும்.
பின்பு சுத்தமான சந்தனக் குழம்பு கொண்டு முழுவதும் பூசி விட வேண்டும். தொடர்ந்து திருமண்ணோ, குங்குமமோ சாத்தி, பூக்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டும். சாளக்ராம மூர்த்தத்தைத் தரையில் வைக்கவே கூடாது. வெள்ளி அல்லது பித்தளை அல்லது செம்புத் தட்டில்தான் வைக்கவேண்டும்.
மஞ்சள் அல்லது வெண்பட்டு விரித்து அதில்தான் திருமேனியை இருக்கச் செய்ய வேண்டும். தீர்த்தத்திற்காக பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, ஏலக்காய், ஜாதிக்காய், சாதிப்பத்திரி முதலியவற்றைப் பொடியாகச் செய்து வைத்துக் கொண்டு சிறிது சுத்த ஜலத்தில் கலந்தால் அது தீர்த்தமாக மாறுகிறது.


ஸ்ரீராம நவமி அன்று சொல்ல வேண்டிய துதி
ஸ்ரீராம நவமி அன்று ராமாயணம் படிக்க இயலாவிடின் சுருக்கமாக, ஒன்பது வரியில் உள்ள இந்த வரிகளைப் பாராயணம் செய்தால் மன அமைதி, மகிழ்ச்சி நிலவும். இதை தினமும் பாராயணம் செய்தால் ராமாயணம் முழுவதும் படித்த பலனைப் பெறலாம். எல்லா காரியங்களிலும் வெற்றி கிட்டும்.

ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தகரம்
அங்குல் யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேயம் ஆஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கல கார்யானுகூலம்
சத்தம் ஸ்ரீராமசந்த்ரம் பாலயமாம்”
ராமன் நாமத்தை தினமும் சொல்பவர்களுக்கு சகல ஐஸ்வரியங்களும் பொங்கி பெருகும்.

கண் குறைபாடுகளை சரிசெய்யும் மந்திரம்
ஓம் பாஸ்கராய நம’ 

என்ற மந்திரமோ நமது கண் பார்வையில் உள்ள குறைபாடுகளைக் களையக்கூடிய தன்மை பெற்றதாகும். நமது பார்வையை அகமுகமாக அமைத்து வைக்கக் கூடிய மகத்துவம் வாய்ந்ததாகும்.
இரண்டு பட்சங்களிலும் வரக்கூடிய பிரதமை மற்றும் தசமி திதிகளில், இந்த மந்திரத்தை 48 அல்லது 108 முறை சூரிய உதயத்தின்போது உச்சாடனம் செய்துவந்தால் பார்வைக் கோளாறுகள் நீங்குவதற்கு அது மிகவும் உறுதுணையாக அமையும். அல்லது அந்தந்த திதிகளில் வரும் சூரிய ஹோரைகளில் ஜபம் செய்வதும் விசேஷமே.  


கல்வி தடை நீக்கும் ஸ்லோகம்

ஓம் அய வதனாய வித்மஹே
வித்யாதராய தீமஹி
தந்நோ ஹயக்ரீவ ப்ரஜோதயாத்’





திருப்பதி ஏழுமலையான் அருளைப் பெறுவதற்கான மந்திரம்
வேங்கடேஸோ வாஸீதேவ
வாரி ஜாஸன - வந்தித
ஸ்வாமி - புஷ்கரிணீ - வாஸ
ஸங்க - சக்ர  - கதாதர
பீதம்பர - தரோ தேவ: கருடாரூட - ஸோபித
விஸ்வாத்மா விஸ்வ- ஸோகேஸ: விஜயோ வேங்கடேஸ்வர
ஏதத் த்வாதஸ நாமானி
த்ரிஸந்த்யம்ய: படேந்நர: ஸர்வபாப- வினிர் முக்தோ
விஷ்ணோஸ்ஸாயுஜ்யம் ஆப்னுயாத்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீவேங்கடேச சுவாமியின் சன்னதியில் பக்தர்கள் காலையிலும், மாலையிலும் இந்த மந்திர சுலோகத்தை தான் ஜெபிக்கிறார்கள். ஆதலால் நீங்களும் இந்த மந்திர சுலோகத்தை ஜெபித்து வீட்டில் இருந்தபடியே திருப்பதி ஏழுமலையானின் அருளை பெருங்கள்.































ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்

ராமாயணம் முழுவதையும் படிக்க முடியாதவர்கள் கீழ்க்கண்ட ஒன்பது வரிகளை மட்டும் பக்தியுடன் பாராயணம் செய்தால் ராமாயணத்தைப் படித்த முழு பலனும் கிடைக்கும். மேலும், சகல நல்ல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தகரம்
அங்குல் யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேயம் ஆஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கல கார்யானு கூலம்
சததம் ஸ்ரீராமசந்த்ரம் பாலயமாம்

இந்த ஒன்பது வரிகளை தினமும் பாராயணம் செய்தால் மன அமைதி, மகிழ்ச்சி நிலவும் என்பது நம்பிக்கை. - See more at: http://vivekaanandan.blogspot.in/2011/11/blog-post_9787.html#sthash.4YajTmc9.dpuf


No comments:

Post a Comment